அவனியாபுரத்தில் வேளாண்மை சட்டத்தை திரும்ப பெற கோரி கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் டிசம்பர் தொடக்கத்தில் இருந்து 50 நாட்களுக்கும் மேலாக விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசுக்கும் விவசாயிகளுக்கும் இடையே நடைபெற்ற 11 கட்டப் பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது.இதனால் குடியரசு தினமான நேற்று டெல்லியில் டிராக்டர் பேரணியை விவசாயிகள் நடத்தினர். எல்லையில் இருந்து டெல்லிக்குள் நுழைய முயன்ற போது அவர்களை காவல் துறையினர் தடியடி அடித்து கலைத்தனர்.விவசாயிகள் மீது தடியடியில் ஈடுபட்ட மத்திய அரசு காவல்துறையை கண்டித்தும், வேளாண்மை சட்டத்தை திரும்பப் பெறக் கோரியும் மதுரை அவனியாபுரம் பேருந்து நிலையத்தில் கம்யூனிஸ்ட் கட்சியினர் கோஷங்கள் எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!