மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்டில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் ஒருவர் கைது.

மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது போலீசார் அதிரடியாக நடவடிக்கை எடுத்து வருகின்றனர் .மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் அண்ணாநகர் போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர் .அப்போது அங்குபுகையிலைபொருட்கள் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. மதுரை பாண்டியன் நகர் ஏ.ஏ.ரோடு பகுதியைச் சேர்ந்த தங்கராஜ் மகன் ரத்னவேல் பாண்டியன் 35 என்பவரிடமிருந்து 205 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து ரத்தினவேல் பாண்டியனை போலீசார் கைது செய்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!