எழுவர் விடுதலை: புறாக்கள் பறக்க விட்டு நூதன போராட்டம்.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள ஏழு பேரை விடுதலை செய்யக் கோரி புறாக்களைப் பறக்க விட்டு நூதன போராட்டம். சமூக ஆர்வலர் முகிலன் குண்டுகட்டாக கைதுமுன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள ஏழு பேரை விடுதலை செய்ய வலியுறுத்தி மதுரை மத்திய சிறைச்சாலையின் முன்பாக முகிலன் தலைமையில் ஏழு புறாக்களை பறக்கவிட்டு 7 தமிழர் விடுதலை கட்சியினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனைத் தொடர்ந்து அவர்களை போலீசார் கைது செய்ய முயன்றனர். இதையடுத்து முகிலன் கைதாக மறுத்து சிறைச்சாலையின் முன்பாக தரையில் அமர்ந்து போராட தொடங்கியதால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது.இதனால் முகிலனை போலீஸார் குண்டுக் கட்டாக தூக்கிக் கொண்டு காவலர்கள் வாகனத்தில் ஏற்றிக் கைது செய்து அழைத்துச் சென்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!