நகை திருட்டுவியாபாரம் செய்தபோது கைவரிசை.

மதுரை ஆரப்பாளையத்தில் பேக்கரியின் உரிமையாளர் வியாபாரம் செய்து கொண்டிருந்தபோது ரூபாய் 72,000 மற்றும் ஒரு பவுன் நகையை மர்ம ஆசாமி திருடியது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.ஆரப்பாளையம் டி.டி. ரோடு வை சேர்ந்தவர் சின்னம்மாள் சின்னசாமி 66. இவர் அதே முகவரியில் பேக்கரி நடத்தி வருகிறார். நேற்று மதியம் பேக்கரியில் வியாபாரம் செய்து கொண்டிருந்த போது தனக்கு சொந்தமான மணிபர்சில் ரூபாய் 71650 மற்றும்ஒரு பவுன் நகையையும் வைத்துவிட்டு வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அதை முடித்துவிட்டு பார்த்தபோது அந்த மணி பர்சை காணவில்லை அதில் வைத்திருந்த பணமும் நகையும் தூருடுபோய்விட்டது .இந்த சம்பவம் தொடர்பாக சின்னம்மாள்சின்னசாமி கரிமேடு போலீசில் புகார் செய்தார்.போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டு ஆசாமியை தேடி வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!