இராஜபாளையம் அருகே 3 வயது சிறுமியிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்ட 55 வயது முதியவர் கைது.

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள தேவதானம் பகுதியை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் இவரது மகன் அண்ணாமலை வயது 55 இவர் இந்த பகுதியில் பல பெண்களிடம் பாலியல் தொந்தரவு ஈடுபட்டதாகவும் தெரிகிறது நேற்று முன்தினம் இரவு அதே பகுதியைச் சேர்ந்த 3 வயது சிறுமியின் நெஞ்சுப்பகுதியில் கடித்து வைத்து பாலியல் தொந்தரவு செய்து இதுகுறித்து தேவதானம் அந்த ஊர் பொதுமக்கள் மற்றும் அந்த சிறுமியின் தாய் அமலி இராஜபாளையம் மகளிர் கவனத்தில் புகார் அளித்துள்ளனர் புகாரையடுத்து அண்ணாமலை பிடித்து விசாரித்ததில் அவர் சிறிது மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பிறந்ததிலிருந்து மன நிலை பாதித்திருந்ததால் தொடர்ந்து இந்தப் பகுதியில் இது போன்ற தொந்தரவில் ஈடுபட்டதை அடுத்து காவல்துறை வழக்கு பதிவு செய்து மதுரையில் உள்ள மனநல மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர் உண்மையிலேயே மனநிலை பாதிக்கப்பட்டுள்ளார் என்பதை விடுத்து மருத்துவரிடம் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!