ராஜபாளையம் தனியார் அகாடமி சார்பில் நண்பர்களுக்கான செஸ் போட்டி நடைபெற்றது.

இராஜபாளையம் தனியார் திருமண மண்டபத்தில் தனியார் அகாடமி சார்பில் செஸ்கமிட்டி நண்பர்களுக்கான செஸ் போட்டி நடைபெற்றது. இதில் தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, மதுரை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து செஸ் கமிட்டி உறுப்பினர் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு போட்டியில் பங்கேற்றனர். 7 சுற்றுகளாக நடைபெறும் இப்போட்டியில் பள்ளி மாணவர்கள் மட்டுமல்லாமல் அனைத்து வயதானவர்களும் போட்டியில் பங்கேற்றனர். மேலும் கொரோணா காலத்தில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நிகழாமல் இருந்ததால், தற்போது கமிட்டி நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டு பாதுகாப்பான முறையில் இப்போட்டியை நடத்துவதாக அகாடமி சார்பில் தெரிவித்தனர்.

செய்தியாளர் வி காளமேகம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!