மதுரை கீரைத்துறையில் கஞ்சா மற்றும் பைக்குகள் பறிமுதல், 4 பேர் கைது.

மதுரை கீரைத்துறை சிந்தாமணி ரோடு பாம்பன் ரோடு சந்திப்பில் கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. கீரைத்துறை சப்-இன்ஸ்பெக்டர் துரைபாண்டி தலைமையில் சென்ற போலீசார் அந்த பகுதியில் விற்பனை செய்த கீரை துறையைச் சேர்ந்த காளீஸ்வரன் 29 ராமகிருஷ்ணன் என்ற அனல் ராமர் 36 மேல அனுப்பானடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்த குமாரவேல்25 அதே பகுதியை சேர்ந்த குமாரவேல் 43 ஆகிய 4 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து ஒரு கிலோ கஞ்சாவையும், அவர்கள் பயன்படுத்திய இரண்டு இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!