இன்று முதல் வழங்கப்படுகிறது தமிழக அரசின் பொங்கல் தொகுப்பு மகிழ்ச்சியுடன் பெற்று சென்ற பொதுமக்கள்

தமிழக அரசு அறிவித்த பொங்கல் தொகுப்பானது ரூபாய் 2500 ஒரு கிலோ பச்சரிசி ஒரு கிலோ சீனி ஐந்து கிராம் ஏலக்காய் ஒரு முழு செங்கரும்பு பொருட்களை தொகுப்பை வழங்கப்படுமென தமிழக அரசு அறிவித்தது இதனடிப்படையில் நாளொன்றுக்கு 200 நபர்களுக்கு மட்டுமே பொங்கல் தொகுப்பானது நேரம் ஒதுக்கீடு செய்து டோக்கன் வழங்கப்பட்டு இன்று முதல் வழங்கப்பட்டு வருகிறது பொங்கல் தொகுப்பை வாங்க வரும் நபர்கள் கட்டாயம் முக கவசம் அணிந்து வரவேண்டும் எனவும் டோக்கன் இல் குறிப்பிட்ட திதி மற்றும் நேரத்தில் மட்டுமே வரவேண்டும் என ரேஷன் கடை ஊழியர்கள் அறிவித்துள்ளார்கள் வருகின்ற 13ஆம் தேதி வரையில் உங்கள் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம் என தமிழக அரசு ஏற்கனவே அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது எனினும் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று பொங்கல் தொகுப்பை வாங்க ஆர்வம் காட்டி வருகிறார்கள் ரேஷன் கடை ஊழியர்கள் குறிப்பிட்ட தேதி நேரத்திற்கு மட்டுமே வழங்கப்படும் என அறிவுறுத்தி அவர்களை திருப்பி அனுப்பினார்கள்…

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!