மின் அமைப்பாளர் கிளைக் கூட்டம்:

சோழவந்தானில் தமிழ்நாடு மின் அமைப்பாளர்கள் மத்திய சங்கத்தின் சோழவந்தான் கிளை சங்கத்தின் கூட்டம் சங்கத் தலைவர் நவநீதகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.துணைத் தலைவர் பிச்சைமணி முன்னிலை வகித்தார் செயலாளர் இளங்கோவன் வரவேற்றார். இக்கூட்டத்தில் , மின் அமைப்பாளர்களுக்கு மத்திய தமிழக அரசின் மூலம் சலுகைகள் பல்வேறு நிவாரணங்கள் கிடைப்பது குறித்து அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது .நலவாரியத்தில் பதிவு செய்வதால் கிடைக்கும் பயன்கள், குறித்து மதுரை அமைப்புசாரா தொழிலாளர்கள் நல மாவட்டத் தலைவர் சங்கரபாண்டி விளக்கங்கள் கூறினார் பொருளாளர் சுகுமாரன் நன்றி கூறினார்..

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!