திருப்பரங்குன்றம் பானகுளம் கம்மாயில் 7 நாட்களாக வீணாகும் நீர்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா நிலையூர் பகுதியில் பானா குளம் கண்மாய் உள்ளது.. இங்கு தண்ணீர் நிரம்பி மறுகால் பாய்ந்து கூத்தியார்குண்டு கண்மாய்க்கு செல்லும் வழியில் உடைப்பு ஏற்பட்டு பல இடங்களில் தண்ணீர் வீணாக செல்கிறது.இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் பொதுமக்கள் வேதனைப்படுகின்றனர்.நிலத்தடி நீரை சேமிப்போம் என போர்டு வைத்தால் மட்டும் போதாது அதை முறையாக பராமரிக்க வேண்டும் என கூறுகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!