மதுரை மாவட்டம் லட்சுமிபுரம் பகுதியில் இன்று காலை 10 மணி அளவில் மூன்று மாடி கொண்ட கட்டிடத்தின் முதல் தளத்தில் உள்ள பாத்திரக் கடையில் தீ விபத்து ஏற்பட்டதாக அனுப்பானடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் வரவே சம்பவ இடத்திற்கு விரைந்த அனுப்பானடி நிலைய அலுவலர் உதயகுமார் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் மற்றும் மதுரை தீயணைப்பு நிலைய அலுவலர் வெங்கடேசன் தலைமையிலான தீயணைப்பு குழுவினர் சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர் மூன்று அடுக்குகள் கொண்ட இந்த தளத்தின் கீழ்த்தளத்தில் பாத்திரக்கடையில் இரண்டாவது தளத்தில் ஒரு குக்கர் விற்பனை நிலையம் மூன்றாவது வீடு ஒன்று இருந்துள்ளது முதல் தளத்தில் பற்றிய தீ வெப்பம் அதிகமாகவே இரண்டு மட்டும் மூன்றாவது தளத்தில் உள்ள வீட்டுக்கும் பரவியது இரண்டு மணி நேர போராட்டத்துக்கு பின் தீயானது கட்டுக்குள் வந்தது தீயணைப்புத் துறையினரால் துரித செயல்பாட்டால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது சம்பவ இடத்தை பார்வையிட்ட மதுரை மாவட்ட தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு மதுரை மாவட்ட மண்டல அலுவலர் வினோத் மற்றும் துணை மண்டல அலுவலர் பாண்டி ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டனர் விபத்து குறித்து மதுரை விளக்குத்தூண் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்..
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்


You must be logged in to post a comment.