ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து சிலிண்டருக்கு இறுதி மரியாதை செய்து ஒப்பாரி வைத்து நூதன போராட்டம்

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் ஜவகர் மைதானத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் நகரச் செயலாளர் மேரி தலைமையில் கேஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து சிலிண்டருக்கு பாடைகட்டி ஒப்பாரி பாடல் பாடி இறுதி அஞ்சலி செலுத்தியும் கல் அடுப்பு வைத்து நூதன போராட்டம் ஈடுபட்டனர்ஆர்ப்பாட்டத்தை விளக்கி மாநில பொதுச் செயலாளர் சுகந்தி விளக்க உரையாற்றினார் கடந்த 1 மாதத்தில் மத்தியில் ஆளும் பிஜேபி அரசு கேஸ் சிலிண்டர்க்கு 100 ரூபாய் உயர்த்தியதை கண்டித்து கண்டன கோஷங்கள் முழக்கமிட்டனர்.செய்தியாளர் வி காளமேகம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!