சோழவந்தான் அருகே தென்கரையில் அய்யப்பன் ஆராட்டு பெருவிழா

சோழவந்தான் அருகே தென்கரை கிராமத்தில் அமைந்துள்ள அய்யப்பன் கோவிலில் ஆராட்டு விழாவை முன்னிட்டு கண்ணன் பட்டர் பிரசாந்த் சர்மா ஆகியோர் யாக பூஜை நடத்தினர் பின்னர் அங்கிருந்து அய்யப்பன் யானை மீது புறப்பட்டு அய்யப்ப பக்தர்கள் பக்தி பாடல் பாடி ஆடிப் பாடி வைகை ஆற்றுக்கு வந்தனர் வைகை ஆற்றில் தண்ணீரில் அமைந்திருந்த மேடையில் அய்யப்பனுக்கு பால் தயிர் உள்பட இருபத்தோரு அபிஷேகங்கள் நடைபெற்று நெய் மற்றும் புனித நீரால் மகா அபிஷேகம் நடந்தது பின்னர் அய்யப்பசுவாமிக்கு வைகையாற்றில் இடுப்பு அளவு தண்ணீரில் ஆராட்டு விழா நடந்தது அப்போது அங்கு கூடியிருந்த அய்யப்ப பக்தர்கள் சரண கோஷம் போட்டனர் இதைத் தொடர்ந்து அய்யப்ப சுவாமி கரை மண்டகப்படிக்கு வந்து அங்கு அலங்காரம் செய்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது மீண்டும் யானையில் அய்யப்பன் அமரவைத்து வீதி உலா நடந்து அய்யப்பன் கோவிலை வந்தடைந்தது இங்கு அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது விழா ஏற்பாடுகளை தென்கரை அய்யப்பன் கோவில் அனைத்து அய்யப்ப பக்தர்கள்…

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!