செக்கானூரணி அருகே ஒருவர் வெட்டிக்கொலை

மதுரை மாவட்டம் செக்கானூரணி அருகே பன்னியானை. சேர்ந்த செந்தில் வயது 38 என்பவர் நேற்று மாலை 5 மணி அளவில் பன்னியான் விளக்கு அருகே நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்து உள்ளார் அப்பொழுது அவர்களுக்குள்ளே ஏற்பட்ட தகராறில் அரிவாளால் வெட்டியதில் முகம் சிதைந்து செந்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் சம்பவ இடத்திற்கு விரைந்த மதுரை மாவட்டம் செக்கானூரணி காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர் முதற்கட்ட விசாரணையில் இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் லாரிகளில் தார்ப்பாய் கிழித்து கொள்ளையடிக்கும் தார்ப்பாய் முருகன் என்கின்ற கூட்டத்தில் இருந்துள்ளார் தற்பொழுதும் திருட்டில் ஈடுபட்டு வந்துள்ளார் தொழில் போட்டியால் கொலை செய்திருக்கலாம் என என்கின்றனர் இவர் மீது மதுரை திண்டுக்கல் உள்ளிட்ட பல மாவட்டங்களில் கொலை கொள்ளை வழக்குகள் உள்ளன என குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!