முல்லைப் பெரியாறு கூட்டு குடிநீர் திட்டத்தை மதுரை பாராளமன்ற உறுப்பினர் எதிர்ப்பதாக மதுரை திருப்பரங்குன்றம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பொதுமக்கள்நோட்டீஸ் ஒட்டி எதிர்ப்பு புகார்

ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஒன்றியத்திற்குட்பட்ட.. ஹார்விபட்டி இந்திரா நகர் எஸ் ஆர் வி நகர்உள்ளிட்ட சுற்று வட்டார மக்கள் மதுரை பாராளமன்ற உறுப்பினர் வெங்கடேசன் எதிர்த்து நோட்டீஸ் ஒட்டி பரபரப்பு ஏற்படுத்தியது…. திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மற்றும் விருதுநகர் மாவட்ட பாராளுமன்ற தொகுதியான.. மதுரை மாநகர் மற்றும் திருப்பரங்குன்றம் ஹார்விபட்டி மற்றும் அதன் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்ததுஅந்த போஸ்டரில்மதுரை பாராளமன்ற உறுப்பினர் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த நபர்கள் ஹார்விபட்டி பூங்காவில் நடைபயிற்சி செல்வதற்காகவே முல்லைப்பெரியாறு லோயர் கேம்ப் கூட்டு குடிநீர் திட்டத்தை எதிர்ப்பதாகவும் திட்டத்தை தடுக்க குற்றம்சாட்டி வருகின்றனர்மேலும் இதற்கு மதுரை பாராளமன்ற உறுப்பினர் வெங்கடேசன். தடையாக இருப்பதாகவும் குற்றம் சாட்டி வருகின்றனர்… குற்றச்சாட்டுக்கு மதுரை பாராளமன்ற உறுப்பினர் பதில் அளிப்பாரா என அப்பகுதி மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்…..இதனால் இந்த போஸ்டரால் மதுரை மாநகர் மற்றும் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!