உதவி ஆய்வாளரை மிரட்டடியவா் கைது

கன்னியாகுமரி மாவட்டம் 01.09.2019 அன்று நாகர்கோவில்  காவல்நிலைய உதவி ஆய்வாளர்  சுந்தரமூர்த்தி மற்றும் காவல் ஆளிநர்கள் புனித சேவியர் சர்ச் சந்திப்பில் வாகன தணிக்கை செய்துகொண்டிருந்தனர். அப்போது சாலையின் நடுவில் குளச்சல் பகுதியை சேர்ந்த முருகன்(37) மற்றும் பிரதீப் ஆகியோர் சென்று கொண்டிருந்தனர். உதவி ஆய்வாளர் அவர்கள் இருவரையும் சாலையின் ஓரமாக செல்ல அறிவுறுத்தினார். ஆனால் அதை உதாசீனப்படுத்தி உதவி ஆய்வாளரை கெட்டவார்த்தையால் திட்டி பணிசெய்ய விடாமல் தள்ளி விட்டனர். உடனே மற்ற காவலர்கள் இருவரையும் பிடிக்க முற்பட்டனர். அதில் முருகனை கைது செய்தனர். பின்பு கோட்டார் காவல் நிலைய ஆய்வாளர்  அன்பு பிரகாஷ்  வழக்கு பதிவு செய்து முருகனை சிறையில் அடைத்தார். பிரதீப்பை தேடி வருகின்றனர்.

செய்தி வி காளமேகம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!