தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நான்காம் ஆண்டு நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறதுஅவருடைய திருவுருவ படத்திற்கு அமைச்சர்கள் சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் அதிமுகவினர் உள்ளிட்ட பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்அந்த வகையில் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சன்னதி தெரு அருகே மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட அதிமுகவினர் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்இதில் திருப்பரங்குன்றம் ஒன்றிய கழக செயலாளர் நிலையில் முருகனுடன் கிழக்குப் பகுதி கழக செயலாளர் வக்கீல் ரமேஷ் மாவட்ட கவுன்சிலர் லட்சுமிபதிஉள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்..
.செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்


You must be logged in to post a comment.