ராமேஸ்வரம் வாலிபர் கொலை

இராமேஸ்வரம் சந்தன மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் மனோஜ் குமார், 24. நேற்று (20.11.2020) மாலை கடலுக்குச் செல்வதாக கூறிவிட்டு வீட்டிலிருந்து சென்றார். இந்நிலையில் இன்று (21.11.2020) அதிகாலை 4 மணி அளவில் கடற்கரை அந்தோணியார் கோயில் பகுதியில் மனோஜ் குமார் கத்தியால் குத்தி கொல்லப்பட்டு கிடந்தார். துறைமுகம் போலீசார் கைப்பற்றிய மனோஜ் குமார் உடலை பிரேத பரிசோதனைக்காக ராமேஸ்வரம் அரசு மருத்துவமனை அனுப்பினர். வழக்கு பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!