அலங்காநல்லூர் அருகே அரசு மதுபானக் கடையை அகற்றக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்:

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே 15.பி. மேட்டுப்பட்டி கிராமத்தில் புதியதாக திறக்கப்பட்டுள்ள டாஸ்மாக் கடையை மூடக்கோரி, கிராமமக்கள் திடீரென, சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து தடைபட்டது.மதுரை மாவட்டம். அலங்காநல்லூர் அருகே 15.பி.மேட்டுப்பட்டியில் அரசு மதுபான கடை திறந்ததையொட் டி கிராம பொதுமக்கள் மதுபான கடை முன்பாக சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து, போக்குவரத்து பாதிதித்தது.தகவலறிந்ததும்,அலங்காநல்லூர் போலீஸ் இன்பெக்டர் நிர்மலா, வருவாய்துறை ஆய்வாளர் சீனிவாசன் | வி.ஏ.ஒ.கமலாராணி கிராம நிர்வாக உதவியாளர் சடச்சாரம் ஆகியோர் பேச்சுவார்த்தையில் இடுபட்டு பின்னர் உறுதி அளி த்ததின்பேரில், சாலைமறியல் கைவிடப்பட்டது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!