இராஜபாளையம் அருகே சேத்தூர் ஐந்து கடை பஜார் பகுதியில் குடிபோதையில் தகராறு ஒருவருக்கு அரிவாள் வெட்டு

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள சேத்தூர் ஆதிதிராவிடர் பள்ளி அருகே நேற்று முன்தினம் நள்ளிரவு இதே பகுதியைச் சேர்ந்த ராமையா மகன் ராமர் (வயது 30 )என்பவருக்கும் ஐந்து கடை பஜார் பகுதியைச் சேர்ந்த சிவகணேஷ் வயது 35 அவரது நண்பர் மூன்று பேர் குடிபோதையில் தகராறில் ஈடுபட்டுள்ளனர் இதில் சிவகணேஷ் ராமரை கத்தியால் வெட்டியுள்ளார் இதில் ராமர் படுகாயமடைந்து அதே இடத்தில் விழுந்துள்ளார் இந்த சம்பவம் அறிந்த அப்பகுதி பொதுமக்கள் சேத்தூர் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்தகவலில் அறிந்து வந்த சேத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் பவுல் ஏசுதாஸ் ராமரை சிகிச்சைக்காக இராஜபாளையம் அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு இந்த குற்றத்தில் ஈடுபட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.

.செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!