பலசரக்குக் கடையில் திடீர் தீவிபத்து போராடி அணைத்த தீயணைப்பு துறையினர்.

மதுரை சூர்யா அருகே உள்ள நகர் அல்அமீன் நகரில் உள்ள பலசரக்கு கடையில் 1:20 அளவில் தீப்பிடித்து எரிவதாக தல்லாகுளம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் வந்தது நிலைய அலுவலர் சுப்பிரமணி தலைமையிலான தீயணைப்பு துறையினர் பலசரக்கு கடையில் எரிந்து கொண்டிருந்த தீயை சுமார் 2 மணி நேரம் போராடி அணைத்தனர் மேலும் அருகிலுள்ள கடைகளுக்கும் வீடுகளுக்கும் தீ பரவாமல் தடுத்தனர் அதிகாலையில் ஏற்பட்ட தீ விபத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது தீவிபத்து குறித்து புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!