திருப்பரங்குன்றம் கோவில் யானையால் தாக்கப்பட்டு உயிரிழந்த உதவி பாகனின் குடும்பத்திற்கு, கோவில் நிர்வாகமும், காப்பீட்டு திட்டம் மூலமும் நிதியுதவி

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் உள்ள அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோவிலுக்கு சொந்தமான யானையை கடந்த மார்ச் மாதம் உதவி பாகன் காளிராஜன் குளிப்பாட்டும்போது திடீரென தாக்கி தூக்கியெறிந்ததில் சம்பவ இடத்திலேயே பாகன் உயிரிழந்தார்.இதனைத் தொடர்ந்துதெய்வானை யானையை திருச்சியில் உள்ள யானைகள் காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.உதவி பாகனின் குடும்பத்திற்காக திருப்பரங்குன்றம் கோயில் நிர்வாகமும் காப்பீட்டு நிறுவனமும் இணைந்து 5 லட்சம் மதிப்பிலான காசோலையை இன்று வழங்கப்பட்டது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!