மதுரை சோழவந்தானில் ஏஐடியூசி சார்பில் ஆர்ப்பாட்டம்

சோழவந்தான் வடக்கு ரத வீதியில் ஏஐடியூசி ஜெனகை ஆட்டோ தொழிலாளர் சங்கத்தின் சார்பாக ஆர்ப்பாட்டம் நடந்தது ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஜோதி ராமலிங்கம் தலைமை தாங்கினார் ஒன்றிய செயலாளர் செல்வராஜ் முன்னிலை வகித்தார் இதில் ஆட்டோ சங்க பொருளாளர் புகழேந்தி துணைச் செயலாளர் குமரேசன் துணைத் தலைவர் சுரேஷ்குமார் உள்பட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர் இதில் தொழிலாளர்களுக்கு கொரோனா புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் பெட்ரோல் டீசல் விலையை கட்டுப்படுத்த வேண்டும் நல வாரியத்தை முறைகேடு இன்றி நடத்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து வைத்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!