திருப்பரங்குன்றம் அருகே அவனியாபுரம் அய் வைத்தனேந்தல் கண்மாய் நிரம்பி வயல் வெளியில் புகுந்த மழைநீர்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா அவனியாபுரம் அருகே அய்வைத்தனேந்தல் கண்மாய் உள்ளது.இம் பகுதியில் கடந்த 4 நாட்களாக பெய்த தொடர் மழையால் அய்வைத்தனேந்தல் கண்மாய் நீர் பெருகி அருகில் உள்ள வயல் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் புகுத்து .அத்துடன் மழை நீரில் மீன்கள் கலந்து வந்ததால் இப்பகுதியில் உள்ள சிறுவர்கள் மற்றும் வாலிபர்கள் தினமும் பொழுதுபோக்காக மீன்பிடித்து வருகின்றனர்.தூண்டில் மற்றும் சிறிய கொசு வலைகளை கொண்டு மீன் பிடிக்கின்றனர் .பாம்புகள், தேள்கள் போன்ற விஷ ஜந்துகள் இருக்கும் அபாயத்தை உணராமல் சிறுவர்கள், முதல் பெரியவர்கள் உள்பட ஏராளமானோர் மீன் பிடிக்கின்றனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!