திருப்பரங்குன்றம் -விமான நிலையம் செல்லும் சாலையில் டூவீலரில் வந்தவர் மீது ஆம்னி கார் மோதியதில் சம்பவ இடத்தில் ஒருவர் பலி.

மதுரை திருப்பரங்குன்றம் அருகே அவனியாபுரம் விமான நிலையம் செல்லும் சாலையில் டூவீலரில் வந்தவர் மீது ஆம்னி கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.மதுரை மாவட்டம்

திருப்பரங்குன்றம் தாலுகா கல்மேடு பகுதியைச் சேர்ந்த புஷ்பராஜன் (வயது 32 ) என்பவர் தனது டூவீலரில் விமான நிலையம் சாலையில் பெருங்குடி நோக்கிச் செல்லும்போது எதிரே மதுரை நகர் நோக்கி வந்த ஆம்னி கார் புஷ்பராஜ் வந்த டூவீலர் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியானார்.இதனால் காரை ஓட்டி வந்த மர்ம நபர்கள் இறங்கி தப்பி ஓடினர் இதுகுறித்து தகவலறிந்து வந்த மதுரை மாநகர் போக்குவரத்துக் காவல் ஆய்வாளர் செந்தில்குமார் மற்றும் அவனியாபுரம் காவல் ஆய்வாளர் பெத்துராஜ் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!