தமிழ்நாடு சீருடை பணியாளர் எழுத்து தேர்வு – 2019

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் மூலம் இரண்டாம் நிலைக் காவலர்கள், ஜெயில் வார்டன்கள் மற்றும் தீயணைப்பு காவலர்கள் பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு மாநிலம் முழுவதும்  (25.08.2019) நடைபெற்றது. இதில் மதுரை மாநகரில் மட்டும் 12 எழுத்து தேர்வு மையங்களில் 11,745 பேர் தேர்வு எழுதினர். மதுரை மாநகரில் 900 காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.  மதுரை மாநகர காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம், அனைத்து தேர்வு மையங்களுக்கும் நேரில் சென்று பார்வையிட்டு பாதுகாப்பு பணியினை ஆய்வுசெய்தார்.

செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!