சுரபி அறக்கட்டளை தாய்மடி இல்லத்தில் எச்ஐவி பாதித்த பெண்ணுக்கு பிறந்தது பெண் குழந்தை:

மதுரையில் ஊரடங்கு காலத்தில் சாலையோரமாக சுற்றித்திரிந்தவர்கள் மதுரை மாநகராட்சி மற்றும் சமூக நலத்துறையின் ஒத்துழைப்போடு சுரபி மற்றும் சில அறக்கட்டளை நிர்வாகிகள் பாதுகாப்பு இல்லங்களில் சேர்த்தனர். மதுரை நகரில் 650 பேர் ஆறு சமுதாயக் கூடங்களில் தங்க வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.இதில், சுரபி அறக்கட்டளையின் கீழ் செயல்படும் தாய்மடி இல்லத்தில் தங்க வைக்கப்பட்டு எச்ஐவி பாதித்த பெண் ஒருவருக்கு பெண் குழந்தை பிறந்தது.அந்த பெண், காவல் உதவி ஆணையர், ஒருங்கிணைந்த பெண்கள் மைய ஒருங்கிணைப்பாளர் பிரமலதா, பூம் மதுரை ரத்த நன்கொடையாளர் அமைப்பு நிர்வாகி என். சர்மிளா, குளோரி, ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!