ஐக்கிய அரபு அமீரக அரசின் சார்பில் ராஸ் அல் கைமா என்ற இடத்திலிருந்து நள்ளிரவு 2 மணியளவில் 186 பயணிகள் மதுரை விமான நிலையம் வந்தனர்.

மத்திய அரசின் வெளியுறவு துறை அமைச்சகம் சார்பில் வெளிநாடுகளில் வசிக்கும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தாயகம் திரும்ப சிறப்பு ஏற்பாட்டின் பேரில் ஐக்கிய அரபு அமீரக பகுதியில் இருந்த தமிழர்கள் சிறப்பு விமானம் மூலம் மதுரை வந்தடைந்தனர்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா மதுரை விமான நிலையத்திற்கு ஐக்கிய அரபு அமீரக நாட்டில் இருந்து ராஸ் அல் கைமா பகுதியில் உள்ள புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தாயகம் திரும்ப ஐக்கிய அரபு அமீரக அரசு சிறப்பு ஏற்பாட்டின் பேரில் நேற்று நள்ளிரவு 2.00 மணிக்கு 186 பேர் மதுரை விமான நிலையம் வந்தடைந்தனர்.அவர்களுக்கு மதுரை விமான நிலையத்தில் கொரான தொற்று பரிசோதனை சுகாதாரத்துறை சார்பில் அதிகாலை 4 மணி வரை நடைபெற்றது.பரிசோதனைக்கு பின்னர் அவர்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!