கொரோனா அச்சத்தில் வாலிபர் தற்கொலை

.மதுரை மாவட்டம் சிறுமலை பாத்திமா நகரைச் சேர்ந்த ராஜா  30. இவர் பெத்தானியாபுரம் மேட்டு தெருவில் வைகை ஆற்று ஓரத்தில் ஆட்டோ மெக்கானிக் ஒர்க்ஷாப் நடத்தி வருகிறார். இவருக்கு கடந்த சில நாட்களாக காய்ச்சல் இருந்ததாக கூறப்படுகிறது இதனால் இவருக்கு கொரோனா தாக்கி இருக்குமோ என அச்சத்தில் இவரது ஒர்க்ஷாப்பில்  அதிகாலை தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். ராஜா தூக்கில் தொங்குவதை கண்ட அப்பகுதி பொதுமக்கள் கரிமேடு காவல்துறைக்கு தகவல் கொடுக்கவே சம்பவ இடத்திற்கு விரைந்த கரிமேடு போலீசார் பிரேதத்தை கைப்பற்றி உடல்கூறு ஆய்வுக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர் தற்கொலை குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!