மதுரையில் கொரோனாவுக்கு தொழிலதிபர் சாவு

மதுரை நெல்பேட்டையை சேர்ந்த 70 வயது முதியவருக்கு கொரோனா நோய் தொற்று ஏற்பட்டது. இதையடுத்து அவர் தனியார் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். இந்நிலையில் அந்த முதியவர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருந்த போதிலும் மருத்துவர்களின் சிகிச்சை பலனின்றி 70 வயது முதியவர் பரிதாபமாக இறந்தார்.மதுரை வெற்றிலைக் கடை பகுதியில் முதியவர் குடும்பத்தினர் இனிப்பு கடை மற்றும் பேக்கரி நிறுவனங்கள் நடத்தி வருவது, இங்கு குறிப்பிடத்தக்க அம்சம்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!