நாகமலை புதுக்கோட்டை அருகே சிறுமியை தாய்மாமனுக்கு திருமணம் செய்து வைக்க முயன்ற பெற்றோர் உட்பட தாய்மாமன் கைது

மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டை அருகே உள்ள நரியம்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் சந்திரசேகர் அவரது மனைவி பாண்டியம்மாள் இவர்களுக்கு 17 வயதில் மகள் உள்ளார்.பாண்டியம்மாளின் மூன்றாவது தம்பி நாகராஜன். சிறுமிக்கும், சிறுமியின் தாய் மாமன் நாகராஜன் என்பவருக்கும் நாகமலை புதுக்கோட்டை அருகே உள்ள பழைய முனியாண்டி விலாஸ் ஹோட்டல் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மே 28 – ஆம் தேதியான நாளை திருமணம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்தது.இதனை அடுத்து சைல்டு லைன் உறுப்பினர் மாலதி என்பவர் குழந்தை திருமணம் நடைபெற இருப்பதாக நாகமலை புதுக்கோட்டை காவல்துறையினருக்கு புகார் தெரிவித்தார்.

புகாரின் பேரில் நாகமலை புதுக்கோட்டை காவல்துறையினர் சந்திரசேகர் மற்றும் பாண்டியம்மாள் ஆகியோரிடம் விசாரணை செய்தபோது சிறுமிக்கு 17 வயது நிரம்பியது, சிறுமிக்கு தாய்மாமன் நாகராஜன் உடன் திருமண ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது.இதனை அடுத்து நாகமலை புதுக்கோட்டை காவல்துறையினர் சந்திரசேகர் பாண்டியம்மாள் மற்றும் தாய்மாமன் நாகராஜன் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளனர்.மேலும் பாண்டியம்மாள் சந்திரசேகர் மற்றும் நாக ராஜன் ஆகியோரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!