மதுரை அருகே வயதான தம்பதி தற்கொலை…

மதுரை மாவட்டம் சமயநல்லூர் வயதான தம்பதியர் தற்கொலை வாடிப்பட்டி 26 மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே ஊர்வலத்தை சேர்ந்தவர் மச்சக்காளை 69. இவரது மனைவி பசுபதி  60. இவர்களுக்கு மூன்று மகன்கள் மூவருக்கும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர். தம்பதியர் மட்டும்  வீட்டின் மேல் மாடியில் தங்கியுள்ளனர். இவர்கள் ஓராண்டு காலமாகவே மன உளைச்சலில் இருந்துள்ளனர். ஏற்கனவே இரண்டு முறை தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளனர். அப்போது உரிய நேரத்தில் காப்பாற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு காப்பாற்றப்பட்டனர். இந்நிலையில்  இரவு அவர்கள் தங்கியிருந்த அறையில் உத்திரத்தின் சேலையில் தூக்கிட்டுத் இருவரும் தனித்தனியாக தற்கொலை செய்து கொண்டனர். இதுகுறித்து சமயநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள் .

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!