கொரோனா தோற்று உறுதி. மதுரை தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகம் மூடல்..

மதுரை மாவட்டம் பைபாஸ் சாலையில் இயங்கி வரும் மதுரை தெற்கு வட்டார போக்குவரத்து கழகம் பணியாற்றிவரும் நாற்பது வயது மதிக்கத்தக்க நபருக்கு கொரோனா தோற்று உறுதியானதை அடுத்து தற்போது அவர் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மாநகராட்சி அதிகாரிகள் கிருமிநாசினி அடித்த பிறகு தற்காலிகமாக வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் உத்தரவிட்டுள்ளார்கள். மேலும் அங்கு பணியாற்றி வந்த நபர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளும் பரிசோதனை வாகனம் தற்போது வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு வர இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இங்கு அலுவலகத்தில் சுமார் 21 பேருக்கு மேல் பணியாற்றி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!