மதுரையை அடுத்த மேலூர் அருகே வெள்ள மலையில் இருந்து கீழையூர் பகுதிக்கு இரண்டு வயது மதிக்கத்தக்க ஆண் புள்ளி மான் ஒன்று உணவு தேடி வந்தது. எதிர்பாராத விதமாக அங்குள்ள தனியார் கிணற்றுக்குள் விழுந்தது பார்த்த பொதுமக்கள் மேலூர் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்து பின் சம்பவ இடத்திற்கு விரைந்த மேலூர் தீயணைப்பு துறையினர் மானை பத்திரமாக மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். வனத்துறையினர் வனவர் கம்க்குடியான் மூலம் பெருமாள் மலை பகுதியில் பத்திரமாக விடப்பட்டது.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்


You must be logged in to post a comment.