மதுரை திருப்பரங்குன்றம் அருகே காஷ்மீர் – கன்னியாகுமரி நான்கு வழிச்சாலையில் இருந்து கூத்தியார்குண்டு கிராமத்திற்கு செல்லக் கூடிய பிராதான சாலையில் தோப்பூர் ஊராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில் தனியார் லாரி எடைமேடை நிலையம் இருந்து வருகிறது. தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட கனரக வாகனங்கள் எடை போட்டு செல்லுகின்றனர்.கூத்தியார் குண்டு ஊருக்குள் செல்லக் கூடிய பிரதான சாலையில் லாரிகள் வழிமறித்து காத்திருப்பதால் போக்குவரத்திற்கு பெரிதும் இடையூறாக உள்ளதாகவும், அதிக லாரிகள் வந்து செல்வதால் சாலைகள் சேதமடைந்து இரு சக்கர வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்படுவதாகவும் சேதமடைந்த சாலையில் இருந்து வெளிவரும் கல்,மணல் தூசியால் மாசு ஏற்படுவதாகவும் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி திருப்பரங்குன்றம் வட்டாட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்


You must be logged in to post a comment.