மதுரை துவரிமான் பகுதியில் அனுமதியின்றி மாட்டு வண்டியில் மணல் அள்ளிய ஒருவர் கைது .

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா நாகமலை புதுக்கோட்டை காவல் நிலையத்திற்கு உட்பட்ட துவரிமான் கிராமத்தில் நாகமலை புதுக்கோட்டை காவல்துறையினர் சார்பு ஆய்வாளர் ராம் நாராயணன் தலைமையில் போலிஸார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது அதே பகுதியை சேர்ந்த பாண்டி என்பவர் மாட்டு வண்டியில் அனுமதியின்றி மணல் அள்ளி விற்பனை செய்வதாக தகவல் வந்தது.வந்த தகவலின் அடிப்படையில் நாகமலை புதுக்கோட்டை காவல்துறையினர் மணல் அள்ளி விற்பனை செய்த பாண்டியை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.தொடர்ந்து அவரிடம் இருந்து மாட்டு வண்டி மற்றும் மணல் பறிமுதல் செய்யப்பட்டது .

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!