போக்சோவில் புது மாப்பிள்ளை கைது.

மதுரை வாடிப்பட்டி அருகே மட்டப்பாறை உதயகுமார் (22), கூலி தொழிலாளி. இவர் கடந்த ஒரு வருடமாக சோழவந்தான் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி நெருங்கி பழகி உள்ளார். இந்நிலையில் நேற்று உதயகுமாருக்கு அவரது ஊரில் வேறு பெண்ணுடன் திருமணம் நடந்தது. சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில் சமயநல்லுார் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிரேஸ் சோபியா பாய் ’போக்சோ’ சட்டத்தின் கீழ் புது மாப்பிள்ளை உதயகுமாரை கைது செய்தார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!