மதுரை விமான நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படையை சேர்ந்த 60 வீரர்களுக்கு முதல் கட்ட கொரானா தொற்று பரிசோதனை நடைபெற்றது.

கடந்த சில நாட்களில் கொரான தொற்று காரணமாக நான்கு மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் சிகிச்சைக்காக தனிமையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இதனைத்தொடர்ந்து மத்திய தொழில் பாதுகாப்பு படை துணை கமாண்டன்ட் உமாமகேஸ்வரன் உத்தரவின் பேரில் சிறப்பு கொரானா மருத்துவ பரிசோதனை மதுரை விமான நிலையத்தில் நடைபெற்றது.

மதுரை மாவட்டம் மதுரை விமான நிலையத்தில் கடந்த சில நாட்களாக கொரான தொற்று காரணமாக 4 மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் தனிமை முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.இதனை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மொத்தம் உள்ள 300 வீரர்களில் முதல் கட்டமாக 60 பேருக்கு இன்று சிறப்பு மருத்துவ பரிசோதனை விமான நிலைய வளாகத்தில் நடைபெற்றது.இதனைத்தொடர்ந்து இன்னும் நான்கு பிரிவுகளாக வீரர்களுக்கு பரிசோதனை நடைபெறும் என தெரிகிறது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!