மதுரை அடுத்த வண்டியூர் வைகை ஆற்றங்கரையில் வாலிபர் ஒருவர் கஞ்சா விற்பதாக அண்ணா நகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்குமாருக்கு தகவல் வந்தது.இதையடுத்து
அவர் போலீசாருடன் சம்பவ இடத்துக்கு சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டார். அப்போது ஒருவர் கையும் களவுமாக பிடிபட்டார்.போலீசாரின் விசாரணையில் அவர் வண்டியூர் அம்மையப்பர் தெருவைச் சேர்ந்த நரிக்குட்டி சரவணன் (வயது 44) என்பது தெரிய வந்தது.இதையடுத்து அவரிடம் இருந்து 1.150 கிலோ கஞ்சா, 300 ரூபாய் ரொக்கம் மற்றும் ஒரு செல்போன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்


You must be logged in to post a comment.