தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையின் இயக்குனர் சைலேந்திரபாபு டிஜிபி மேலான உத்தரவின்படி உலக சுற்று சூழல் தினத்தை முன்னிட்டு மதுரை தீயணைப்பு மீட்பு பணிகள் நிலைய வளாகத்தில் தென்மண்டல துணைஇயக்குநர் சரவணக்குமார் செம்மரக்கன்று நட்டு மரம் நடும் விழாவை துவக்கி வைத்தார்கள்.அதனை தொடர்ந்து மாவட்ட அலுவலர் மதுரை கல்யாணகுமார் தேக்கு மரக்கன்று நட்டார்கள். அதைத்தொடர்ந்து தென்மண்டல துணைஇயக்குநர் அலுவலக உதவி மாவட்ட அலுவலர்கள் பாண்டி மற்றும் செந்தில்குமார் வென்தேக்கு மரக்கன்றுகளை நட்டார்கள். மதுரை நிலைய அலுவலர் போக்கு வரத்து . தர்மலிங்கம் மதுரை டவுன் நிலைய அலுவலர் வெங்கடேசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு விழா சிறப்பாக நடைபெற ஏற்பாடு செய்திருந்தார்கள்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்


You must be logged in to post a comment.