மதுரை-முகக்கவசம் அணிவது கட்டாயம்: மீறினால் 100 ரூபாய் அபராதம்.

மதுரை மாநகரில் கொரோனா நோய்த் தொற்று காரணமாக ஊரடங்கு சட்டம் அமலில் உள்ளது.இதன் காரணமாக பொதுமக்கள் வெளியில் செல்லும்போது முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.இருந்தபோதிலும் பொதுமக்களில் சிலர் வெளியில் செல்லும்போது முகக்கவசம் அணிவது இல்லை என்பது தெரியவந்து உள்ளது.இதையடுத்து மதுரை மாநகராட்சி முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்க முடிவு செய்து உள்ளது.இதன் ஒரு பகுதியாக மதுரை மாநகர சுகாதாரத்துறை அதிகாரிகள் 100 வார்டுகளிலும் இன்று அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.அப்போது முகக்கவசம் அணியாமல் வரும் பொதுமக்களிடம் 100 அபராதம் வசூலித்து, அவர்களுக்கு தலா ஒரு முகக்கவசம் வழங்கும் நடைமுறை அமல் படுத்தப்பட்டு உள்ளது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!