மதுரை பரவை மொத்த காய்கறி விற்பனை நிலையத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் வினய் , . மாநகராட்சி ஆணையாளர் .விசாகன் திடீர் ஆய்வு மேற்கொண்டனர் அப்பொழுதுமாவட்ட ஆட்சியாளர் ஆய்வின்போது வைரஸ் தொற்று பரவும் அளவிற்கு விதியை மீறி செயல்பட்ட மொத்த காய்கறி அங்காடிகளுக்கு சீல் வைத்தனர். தொடர்ந்து விதிமுறைகளை மீறி செயல்படும் கடைகளுக்கு கட்டாயமாக சீல் வைக்கப்படும் எனவும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் ஆகியோர் கடும் எச்சரிக்கை விடுத்தனர். அனைவரும் கட்டாயமாக விதிமுறைகளை பின்பற்றி நடக்க வேண்டும் .சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் முக கவசம் அணிய வேண்டும். பல்வேறு கட்டுப்பாடுகளை மதுரை மாவட்ட ஆட்சியாளர் விதித்துள்ளார். இதை கடைப்பிடிக்காத ஒரு கடையும் சில் கட்டாயமாக வைக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்


You must be logged in to post a comment.