கடந்த 4 நாட்களாக மதுரை உள்ளிட்ட 4 மாநகராட்சிக்கு கடும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது இந்த நிலையில் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்காக ஒருநாள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை அத்தியாவசிய பொருள் வாங்குவதற்கு பொதுமக்களுக்கு மாவட்ட நிர்வாகங்கள் அனுமதி வழங்கியிருந்தார்கள். இதனடிப்படையில் பொதுமக்கள் மளிகை கடை மற்றும் உழவர் சந்தை மற்றும் காய்கறி கடைகளில் கூட்டம் குவிந்தனர். இதை கட்டுப்படுத்த காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர் .ஒவ்வொருவரும் முக கவசம் அணிந்து ஒவ்வொருவரும் சந்தைக்கு வர அனுமதிக்கப்பட்டார்கள். மேலும் காய்கறி வாங்கும் நபர்கள் சமூக இடைவேளையை பின்பற்றி காய்கறி வாங்க அறிவுறுத்தப்பட்டனர். காவல் துறையுடன் இணைந்து முன்னாள் ராணுவத்தினரும் மற்றும் தேசிய மாணவர் படையில் இணைந்து மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் சமூக இடைவெளியை பின்பற்ற ஒலிபெருக்கி மூலமாகவும் மேலும் தனிமனித இடைவேளை பின்பற்றி பொருட்களை வாங்கி செலவும் காவல்துறை அறிவுறுத்தினார்கள். இது பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றது. குறிப்பாக மதுரை பழங்காநத்தம் உழவர் சந்தையில் தங்கக் கவசம் அணியாமல் உள்ளே யாரையும் அனுமதிக்கப்படவில்லை. மேலும் அங்கே சுப்பிரமணியபுரம் காவல் ஆய்வாளர் மருத்துவர் சக்கரவர்த்தி தலைமையில் சமூக இடைவெளியை பின்பற்றி பொருட்களை வாங்கிச் செல்லுமாறு ஒலிபெருக்கி மூலமாக அறிவிப்புகளை செய்து வந்து கொண்டு இருந்தார்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









