மதுரை காளவாசல்- திடீர் தீ விபத்து .

மதுரை மாவட்டம் பைபாஸ் சாலை பழைய கருப்புசாமி கோவில் அருகே  காலை காய்ந்த முள் மற்றும் பழைய இரும்பு வியாபாரி சேமித்து வைத்திருந்த அட்டை பெட்டிகள் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. பின் அக்கம் பக்கத்தினர் இதை பார்த்து அவர்கள் வீட்டில் இருந்து தண்ணீரை எடுத்து வைக்க முயற்சித்த போதும் அணையாமல் மளமளவென எரியா தொடங்கியது. தொடர்ந்து அப்பகுதி மக்கள் மதுரை டவுன் தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுத்தது சம்பவ இடத்துக்கு விரைந்த நிலை அதிகாரி  வெங்கடேசன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர். இதனால் அருகில் இருந்த ஜேசிபி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட வாகனங்கள் அனைத்தும் தீயிலிருந்து தப்பின. மதுரை டவுன் தீயணைப்புத்துறையினர் துரித செயல்பாட்டால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!