அழகர்கோவிலில் கொரோனா நோய் தடுப்பு முயற்சியாக மேலூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் தலைமையில் கிருமிநாசினி தெளிக்கும் பணி

தமிழகத்தில் பரவிவரும் கொடிய கொரோனா நோய்தொற்று நடவடிக்கையாக மதுரை உலகப் பிரசித்தி பெற்ற அழகர் கோவில் பகுதி முழுவதும் அ.வல்லாளப்பட்டி செயல் அலுவலர் தேவியின் தீவிர முயற்சியால் பேரிடர் மேலாண்மை வாகனத்தின் மூலம் தூய்மைப் பணியாளர்களின் உதவியோடு கிருமி நாசினி தெளிக்கும் பணி செயல்படுத்தப் பட்டது. .மேலும் இந்நிகழ்ச்சியில் மேலூர் யூனியன் சேர்மன் பொன்னுச்சாமி, வலையபட்டி ஊராட்சி மன்ற தலைவர் ஜீவா தங்கம் ஒன்றிய கவுன்சிலர் மலைச்சாமி, பேரிடர் மீட்பு துறை மேற்பார்வையாளர் அங்குராஜா, அழகர் கோவில் நிர்வாக அலுவலர்கள் அனிதா, கருப்பையா, சதீஷ், மற்றும் கோவில் நிர்வாகிகள் தூய்மைப் பணியாளர்கள் உட்பட பேரூராட்சி அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!