தனியார் பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து 6 பேர் பலி. 8 க்கும் மேற்பட்டோர் காயம்

விருதுநகர் மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள சிப்பிபார பகுதியில் இயங்கிவந்த தனியாருக்கு சொந்தமான ராஜம்மாள் பட்டாசு ஆலையில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 6 பேர் பலி. 8 பேர் காயம் அடைந்தனர். காயமடைந்தவர்களை தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனைக்கு முதல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்‌.இரானி (42)ஜெயபாரதி (45)பத்ரகாளி (33)வேலுத்தாய் (34)தாமரைச்செல்வி (32)தங்கம்மாள் (39)முருகைய்யா ஆகியோர் உயிரிழந்தனர்.சுப்பிரமணியன்  பொன்னுத்தாய் சுப்பம்மாள் அய்யம்மாள் மாடசாமி பேச்சியம்மாள்முருகலட்சுமி ஜெயராம் ஆகியோர் காயம் அடைந்தனர் .இவ்விபத்து குறித்து காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!