கரோனா பாதிப்பு? வெளிநாட்டில் இருந்து திரும்பிய இளைஞர் அரசு மருத்துவமனையில் அனுமதி!

மதுரை: கரோனா பாதிப்பு இருக்குமோ என்ற சந்தேகத்தின் காரணமாக இத்தாலியில் இருந்து மதுரை வந்த இளைஞர் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்க ப்பட்டுள்ளார்.மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் இத்தாலி நாட்டிலிருந்து தில்லி வழியாக மதுரை வந்த அனில்ராஜ்(35) என்பவருக்கு கரோனா தொற்று இருக்குமோ என்ற சந்தேகத்தில் பிரத்தேயக வார்டில் அனுமதிக்கப்பட்டு பரிசோதனை மற்றும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.கரோனா தொற்று குறித்து பரிசோதனைக்குப் பிறகே தெரிய வரும் என மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை டின் ஜெ.சங்கு மணி தெரிவித்துள்ளார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!