காா் விற்பனை நிலையத்தில் கையாடல். கேசியர் கைது.

திருப்பரங்குன்றம் அருகில் உள்ள தோப்பூரில் தனியார் புதிய கார் கார் விற்பனை செய்யும் நிறுவனத்தில் கேசியராக வேலை பார்த்து வருபவர் மதுரையைச் சேர்ந்த நாகரத்தினம்(32) இவர் கடந்த 2017 ம் ஆண்டு முதல் வாடிககையாளர்கள் செலுத்தும் இன்சூரன்ஸ் தொகையை ரொக்கமாக பெற்று இன்சூரன்ஸ் நிறுவன கணக்கில் செலுத்தாமல் கையாடால் செய்துள்ளார். தனிக்கையின் போது கணக்கு மேலாளர் கோபாலகிருஷ்ணன் ரூ.5,16,406 ரூபாயை கேசியர் நாகரத்தினம் கையாடல் செய்ததை கண்டுபிடித்துள்ளார். இதனைத்தொடர்ந்து கோபாலகிருஷ்ணன் அளித்த புகாரின் அடிப்படையில் ஆஸ்டின்பட்டி போலீசார் கையாடல் செய்த கேசியரை கைது செய்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!