மதுரை மாவட்டம் சிலைமான் ரயில் நிலையம் அருகே மதுரை
ராமேஸ்வரம் செல்லும் ரயில் தண்டவாளத்தில் சுமார் 30 லிருந்து 35 மதிக்கத்தக்க ஆண் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு ரயில் மோதி உயிரிழந்து கிடப்பதாக மதுரை ரயில்வே காவல் துறைக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மதுரை இரும்பு பாதை காவல்துறையினர் அவரைப்பற்றி அடையாளம் காணும் விவரங்களை சேகரிக்க அக்கம்பக்கத்தில் விசாரித்து பார்த்தார்கள். எனினும் இவரைப் பற்றிய விவரங்கள் எதுவும் தெரியவில்லை. உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த மதுரை இரும்புப் பாதை காவல்துறையினர் இறந்தவர் யார் எந்த ஊர் என தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் இவரை பற்றிய தகவல் தெரிந்தவர்கள் மதுரை ரயில் நிலையத்தில் உள்ள இரும்பு பாதை காவல்நிலையத்தில் தகவல் தெரிவிக்கலாம் என காவல்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









