இசுலாமியர் மீது வன்மம் கக்கிக்கொண்டிருந்த நச்சுப் பாம்புகள் அரேபியரின் எதிர்ப்பைக் கண்டு ஏன் பயந்து பம்முகின்றன?.
கடந்த ஆறு மாதங்களுக்கு முன் சவுதி அரேபியா சென்றிருந்த மோடி நூறு கோடி பில்லியன் டாலருக்கு (7,65,000 கோடி ரூபாய் மதிப்பில்) இந்தியாவிடம் முதலீடு செய்ய சவுதி மன்னரைக் கேட்டிருந்தார். சவுதியும் ஒப்புக்கொண்டிருந்தது. மேலும் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்குகளில் 20% சவுதியின் ஆரம்கோ வாங்கி இருக்கிறது. இதன் மதிப்பு மட்டும் 75பில்லியன் டாலர்கள் (5,70,000 கோடி ரூபாய்) இதுவே இந்தியாவில் சமீபத்தில் நிகழ்ந்த மிகப்பெரும் வெளிநாட்டு முதலீடு. சவுதி இந்தியாவுடன் வணிகம் செய்யும் நாடுகளில் நான்காவது பெரிய நாடாக இருக்கிறது.
மேலும் மோடியுடனான சந்திப்பில் சவுதி இந்தியாவில் குறிப்பாக கர்நாடகாவில் (தேஜஸ்வி சூர்யாவின் மாநிலம்) இரண்டாவது பெரிய எண்ணை சேகரிப்பு கேந்திரத்தை உருவாக்க திட்டமிட்டு இருக்கிறார்கள். இந்தியாவின் சரிவடையும் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்த முஸ்லீம் நாடுகளின் முதலீடுகள் தேவை. 2024ம் வருடத்தில் இந்தியாவின் பெட்ரோலிய தேவை சீனாவை மிஞ்சிவிடும் நிலையில் இருக்கிறது. இப்படி இந்தியாவின் பெட்ரோலிய வர்த்தகமும், ரிலையன்ஸ் மார்வாடி கும்பலின் பொருளாதார நலனும் இவர்களோடு பின்னிப் பிணைந்து இருக்கிறது.
இதைவிட முக்கியமாக, இந்த வளைகுடா நாடுகளை பகைத்துக் கொண்டால், ’காசுமீர் ஆக்கிரமிப்புப் பிரச்சனை’ சர்வதேச அளவில் எழுப்பப்பட்டுவிடும். வளைகுடா முஸ்லீம் நாடுகள் காசுமீர் பிரச்சனையை ஐநாவின் அனைத்து அவைகளிலும் எழுப்ப இயலும். இந்த நெருக்கடியை மோடி-பாஜக அரசினால் எதிர்கொள்ளும் வலிமையற்றது. டில்லியில் நடந்த முஸ்லீம் இனப்படுகொலையை கவனித்து வந்த சர்வதேசமும், வளைகுடா நாடுகளும் கொரொனோ பிரச்சனையில் மேலும் முஸ்லீம்களை குறிவைத்ததால் எதிர்வினை செய்ய கிளம்பி இருக்கிறது.
சவுதியும், அமீரகமும் இதை எதிர்க்காமல் போகும் பட்சத்தில், துருக்கியின் தலைமையில் இயங்கும் இரண்டாவது முஸ்லீம் கூட்டணி நாடுகள் இந்தியாவை நோக்கி எழுப்பும் கேள்வியை இனிமேலும் இந்தியாவால் தவிர்க்க இயலாது. ஒரு புறம் துருக்கியுடன் பகை, மறுபுறம் ஈரானுடன் நட்பு முறிவு, மலேசியா-இந்தோனேசியாவில் எதிர்ப்பு, உள்நாட்டில் முஸ்லீம்கள் மீதான தாக்குதல் எனும் சூழலில் வளைகுடா நாடுகளையும் பகைத்துக் கொண்டால் இந்தியாவின் பிராந்திய முக்கியத்துவமும், பொருளாதார நலனும், காசுமீர் ஆக்கிரமிப்பும் கேள்விக்குரியதாகும். அதன் பின்னர், சங்கிகள் இந்தியாவின் எல்லையை கடக்கக் கூட இயலாது.
இதைவிட மார்வாடிகளின் பிசினஸ் நலனைக் காட்டிலும் இவர்களுக்கு ‘இந்துத்துவ வெறி’ முக்கியமில்லை. இன்னும் சொல்ல வேண்டுமெனில் இந்துத்துவ வெறியை வளர்ப்பதே மார்வாடிகளின் பிசினஸ் ஆதிக்கத்திற்காகத்தான். இதில் பிசினஸிற்கு இடையூறு நேருமெனில் ‘இந்துத்துவாவை’. ‘ஆர்.எஸ்.எஸை’ கைகழுவக் கூடியவர்கள், மயிலாப்பூர், மாம்பலம் கும்பலை மட்டும் விட்டு வைப்பார்களா?
சுயநலம் என வந்துவிட்டால் நாட்டை விற்றுவிடுவர் இந்த பயங்கரவாதிகள், இப்போது வளைந்து, குனிந்து மன்னிப்பு கேட்பது மனம் திருந்தி அல்ல. விழுந்த அடி அப்படிப்பட்டது. இவர்களோடு சமசரம் செய்து பிழைத்தவர் எவரும் இல்லை.
அரபியரைப் பார்த்தாவது தமிழ்நாட்டின் பெரிய கட்சிகள் இவர்களை எதிர்கொள்ளும் வழிகளைக் கற்றுக் கொள்வது நல்லது. சுயநலக் கிருமிகளை பெரியாரைப் போல துணிந்து எதிர்த்து நின்று கையாள்வதைத் தவிர வேறு வழிகளை வரலாறு கண்டதில்லை. அரேபியாவும் இன்று இதைச் சொல்கிறது.
தோழர் திருமுருகன் காந்தி மே17 இயக்கம்

உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









